படுக்கை அறையில் போதையில் முன்னாள் பெண் எம்பி : அரை குறை ஆடையுடன் சிக்கிய மர்மநபர்.. 2வது கணவரின் புகாரால் சிக்கல்!!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2022, 5:12 pm
சென்னை : தனக்கு தெரியாமல் மர்மநபர்களை வீட்டிற்கு அனுமதித்த முன்னாள் பெண் எம்பி மீது கணவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளவர் சசிகலா புஷ்பா. அதிமுக முன்னாள் எம்பியாக இருந்தவர். தற்போது இவர் சென்னை பாடி டிவிஎஸ் காலனி பகுதியில் உள்ள ஜீவன் பீமாநகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு தெரியாமல் வீட்டு படுக்கை அறையில் மர்மநபர்களை அனுமதித்தாக இரண்டாவது கணவர் ராமசாமி ஆன்லைனில் சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்த வீடியோவை ஆதாரமாக திரட்டி வழக்கறிஞர் ராமசாமி புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகி காரில் கடந்த 13ம் தேதி எனது மகளுடன் சென்னை வந்தேன்.
சென்னை ஜீவன் பீமா நகரில் உள்ள எனது வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன், அப்போது அமுதா என்பவர் கதவை திறந்தார். வீட்டு படுக்கை அறையில் உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடந்தன. மேலும் ஆல்கஹால் வாடையும் வீசியது. படுக்கை அறையில் எனது மனைவி சசிகலா புஷ்பா படுத்திருந்தார். மற்றொரு அறையில் அறைகுறை ஆடையுடன் அடையாளம் தெரியாத மர்மநபர் இருந்தார்.
இதைப்பார்த்த நான் அதிர்ச்சியாகி அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்தேன், அப்போது அந்த நபரும் அமுதா என்பவரும் என்னை ஆபாசமாக திட்டினர். எனவே அவர்கள் மீதும், கணவனாகிய எனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த மனைவி சசிகலா புஷ்பா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் ராமசாமி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட ஜெஜெ நகர் போலீசார், சசிகலா புஷ்பாவை காவல்நிலையத்திற்கு நேரில் விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளனர்.