சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக.. வழிகாட்டியாக டி.டி.வி.தினகரன் : அதிமுக முன்னாள் எம்எல்ஏ விருப்பம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 1:03 pm

கோவை : அதிமுக-அமமுக ஒன்றிணைந்து சசிக்கலா தலைமையில் டிடிவி தினகரன் வழி நடத்தலில் இயங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி விளாங்குறிஞ்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக தலைமை சரியில்லாமல் போனது தான் காரணம்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பொதுமக்கள் அதிமுக.,வை விரும்பாமல் வாக்களித்து உள்ளனர். அமமுக அதிமுக இணைந்து சசிகலா தலைமையில் டிடிவி வழிகாட்டுதலில் செயல்பட்டால் தான் அதிமுக மீளும். இரண்டு கட்சிகளிலும் இருக்கின்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தரவில்லை. கட்சியின் தலைமையில் இருந்து சட்டமன்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க என்னை கேட்டுகொள்ளததால் நான் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தேன்.

அதிமுக-அமுமுக பிரிந்து இருந்ததால் தான் திமுக வெற்றி பெற்று விட்டது. உள்ளாட்சி தேர்தலை அதிமுக ஆட்சியில் இருந்த போதே நடத்தி இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் வென்றிருக்கும்.

முன்னதாகவே தேர்தலை நடத்தி இருந்தால் வென்றிருக்கலாம் என பல அதிமுக கவுன்சிலர்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர். எனவே இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட விருப்பம். என்னை யாரும் வற்புறுத்தி பேச வைக்கவில்லை. இவ்வாறு ஆறுக்குட்டி கூறினார்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!