NIGHT SHIFT என கூறி கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம் : கள்ளக்காதலன் வீட்டிற்கே சென்று கணவன் செய்த கொடூர செயல்!!
Author: Udayachandran RadhaKrishnan19 March 2022, 1:05 pm
திருப்பூர் : மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்த கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார். இவரது மனைவி ப்ரியா. இவருக்கும் திருவாரூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் ஒரு வருடமாக தகாத உறவு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு செல்வதாக சென்ற பிரியா தமிழரசன் வீட்டிற்கு சென்றதை மோப்பம் பிடித்த சசிகுமார் ப்ரியாவின் கள்ளக்காதலன் தமிழரசன் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு தூங்கிக்கொண்டிருந்த தமிழரசன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு சசிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.