எனது திருமணம் தள்ளி போனதற்கு இதுதான் காரணம்.. பிரியா பவானி சங்கர் ஓப்பன் டாக்..!

Author: Rajesh
2 June 2022, 7:01 pm

‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘மாபியா’ ‘ஓமணப்பெண்ணே’ போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் அருண்விஜய்யின் ‘யானை’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, ஜெயம்ரவியின் ‘அகிலன்’ எஸ்.ஜே. சூர்யாவின் ‘பொம்மை’ சிம்புவின் ‘பத்து தல’, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட ஒரு தொகை படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகை பிரியா பவானி சங்கர், ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என கூறப்படும் நிலையில், தனது காதலரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து, காதலருடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நான் கல்லூரி படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நடிக்க வாய்ப்புக்கள் அதிகம் வருவதால் திருமணம் தள்ளிப் போய்விட்டது’ என்றும் தெரிவித்துள்ளார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!