தேசியக் கொடியில் இயேசு வாசகம் : வீட்டின் மொட்டை மாடியில் பறக்க விட்ட தனியார் பள்ளி ஆசிரியர்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2022, 11:58 am

தாராபுரத்தில் தேசிய கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (வயது 36). இவர் தாராபுரத்தில் உள்ள விவேகம் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றி ஒற்றுமையை வகைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.

அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசியக் கொடியில் ‘இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும் என சர்ச்சைக்குரிய வாசகம் எழுதிய தேசிய கொடியை தனது வீட்டின் மொட்டைமாடியில் கட்டி இந்திய தேசிய மூவர்ணக் கொடியை பறக்க விட்டார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தாராபுரம் போலீசில் தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதன் பின்னர் ஆசிரியர் எபினை தேசியக்கொடி அவமதிப்பு குறித்த வழக்கில் கைது செய்ய இது சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!