மீனவர்கள் விரித்த வலையில் சிக்கிய ராட்சத டால்பின்கள் : அடுத்த கனமே மீனவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan1 December 2022, 8:21 pm
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரையில் உள்ள சீலா மீன்பாடு பகுதியில் மீனவர்கள் கரைவலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் வலையில் 6 மற்றும் 8 வயது மதிக்கதக்க 2 டால்பின் குட்டிகள் சிக்கியிருந்தன. கரைக்கு வலையினை கொண்டுவந்த போது இதனை கண்ட மீனவர்கள் விரைவாக செயல்பட்டு வலையில் சிக்கியிருந்த இரு டால்பின் குட்டிகளையிம் மீட்டு அவற்றை மீண்டும் கடலில் விட்டனர்.
அரியவகை பாலூட்டிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள டால்பின்களை பாதுகாப்பாக கடலில் விட்ட மீனவர்களின் விழிப்புணர்வு மற்றும் மனிதாபிமான செயலை மாவட்ட மற்றும் கீழக்கரை வனத்துறை அலுவலர்கள் பாராட்டினர்.