விபத்து நடப்பதற்கு முன் Adjustment-க்கு சென்ற யாஷிகா?.. உண்மையை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
20 ஏப்ரல் 2023, 6:00 மணி
yashika anand -updatenews360
Quick Share

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

yashika anand -updatenews360

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

Yashika-Anand- updatenews360

இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார்.

இதனிடையே, நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது கார் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

yashika anand -updatenews360

இவ்விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று சில மாதங்களுக்கு பிறகு வீடும் திரும்பினார்.

இந்த விபத்து தொடர்பாக மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இவ்வழக்கு விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் மார்ச் மாதம் 22ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை.

yashika anand -updatenews360

எனவே கடந்த மார்ச் 23ம் தேதி யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் யாஷிகா ஆஜரானார். பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி அவர் ஆஜர் ஆகியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜரானதையடுத்து யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தளர்த்தியது.

Yashika Anand - Updatenews360

இந்த விபத்திற்கு நடைபெறுவதற்கு முன்பு யாஷிகா மற்றும் அவரின் தோழி மது அருந்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் யஷிகா தனது தோழியை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து சென்றதாக பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 387

    2

    0