கோர விபத்து… தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கரம் : 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 May 2023, 9:44 pm

கோர விபத்து… தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கரம் : 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி!!

கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுக்காவில் உள்ள சோரடி என்ற இடத்தில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இச்சம்பவத்தில், பலர் பேருந்தில் சிக்கிக் கொண்டுள்ளனர், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

காயமடைந்தவர்கள் ஷிமோகாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர், அங்கு தீயணைப்பு வீரர்கள் விடப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!