ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் பெறலாம்… ரூ.20 கோடி மோசடி செய்த பலே கில்லாடிகள் கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2023, 1:44 pm

கோவை காந்திபுரம் நியூ சித்தாபுதூர் பகுதி பாரதியார் சாலையில் 2 இயங்கி வந்த Daily Max Capitals Pvt Ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் நிறுவனர் செந்தில்குமார் அவரது மனைவி லலிதா, பங்குதாரர்களான கோகுல், பாலு, நவராஜ், ஆனந்தராஜன் ஆகியோர்.
இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஒன்பது மாதங்களில் 2 லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி 2020ம் ஆண்டுக்கு முன் விளம்பரம் செய்த நிலையில் இதனை நம்பி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் முதலீடு செய்துள்ளனர்.

இதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்ற நிலையில் பணத்தை திரும்பத் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர பொருளாதாரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவன செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோகுல், மற்றும் ஆனந்தராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ