அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டு முன்பு ராணுவத்தினர் குவிப்பு ; தலைமை செயலகத்திற்குள் புகுந்த அதிகாரிகள் ; சென்னையில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
13 June 2023, 2:38 pm

சென்னை ; அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் அண்மையில் மின்சாரம் மற்றும் ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 8 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி, பாதுகாப்புக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக என தகவல் வெளியாகி உள்ளது. தலைமைச்செயலத்தில் சில வங்கி அதிகாரிகள் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கும், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

  • vadivelu told about that his own dialogue used as title for many films எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு