கணவரோடு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக கவுன்சிலர்… 18 வயது மகளுக்கும்… பின்னணியில் ஷாக்..!!
Author: Babu Lakshmanan12 July 2023, 12:06 pm
திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள 13வது கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த தேவிபிரியா. இவரது கணவர் அருண்லால். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், திமுக கவுன்சிலர் தேவி பிரியாவும், அவரது கணவர் அருண்லாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், 18 வயது மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், கடன் பிரச்னையால் குடும்பத்தோடு பெண் கவுன்சிலர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்துள்ளது.
பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.