லட்சம்பேர் குவியும் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம்… பந்த் காரணமாக வெறிச்சோடிய காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan29 September 2023, 4:58 pm
லட்சம்பேர் குவியும் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம்… பந்த் காரணமாக வெறிச்சோடிய காட்சி!!
பெங்களூரு நகரில் உள்ள மெஜஸ்டிக் பேருந்து நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் இடமாகும். நாள் முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து சென்று கொண்டிருப்பதால் எப்பொழுதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் இன்று காவிரி விவகாரத்தில் முழு கடை அடைப்பு போராட்டத்தில் காரணமாக மெஜஸ்டிக் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வணிக வளாகங்களும் முழுவதுமாக மூடப்பட்டு காட்சியளிக்கின்றன வழக்கம் போல அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும் மக்கள் இல்லாத காலிப் பேருந்துகளாகவே அது காணப்படுகின்றன.