ஆலியா பட் செருப்பால அடிக்க மாட்டாங்களா? பலான விஷயத்தை பளீச் என போட்டுடைத்த சீரியல் நடிகை..!
Author: Vignesh18 January 2024, 10:00 am
ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.
வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை “ரேஷ்மா” என்னும் பெயரை விட “புஷ்பா” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும். விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை “ஜெனிபருக்கு” பதிலாக “ரேஷ்மா” தான் நடிக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய ரேஷ்மா, சிலர் என்னை மியா காலிஃபா என்று அழைப்பார்கள்.
ஆனால், மியா காலிஃபா அழகாக இருப்பார். அந்த விதத்தில் என்னை இவர்கள் மியா காலிஃபா என்று அழைப்பது நல்லது அல்ல. நான் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டால் எனக்கு ஒரு பத்து பாசிட்டிவான கமெண்ட்கள் வரும். ஆனால், அதற்கு ஆப்போசிட்டாக 100 நெகடிவ் கமெண்ட்கள் வரும். சிலர் என்னுடைய உடல் பாகங்களை வைத்து மோசமாக கமெண்ட் செய்திருப்பார்கள்.
உனக்கு அதை பார்க்க வேண்டும் என்றால், தாராளமாக பார்த்துக்கொள். உன்னை தடுக்க மாட்டேன். எல்லோரும் என்னை பதம் பார்க்க ஆசைப்படுகிறார்கள். உண்மையில், அது மிக மிக கடினமான ஒரு விஷயம். எனக்கு கூட நடிகர் ரன்பீர் கபூரை பதம் பார்க்கணும் இருக்கு, ஆனால் அப்படி பண்ணால் ஆலியா பட் செருப்பால அடிக்க மாட்டாங்களா? என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.