ICUவில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை- சிகிச்சைக்கு உதவி கேட்கும் குடும்பத்தினர்..!
Author: Vignesh6 April 2024, 2:40 pm
டோலிவுட்டில் இருந்து தமிழுக்கு வந்து படங்கள் நடித்த பல ஹீரோயின்கள் உள்ளனர். அதில், ஒருவர் தான் நடிகை அருந்ததி நாயர். இவர் தமிழில் விஜய் ஆண்டனியின், சைத்தான், பொங்கி எழு மனோகரா, பிஸ்தா, கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள் போன்று படங்களில் நடித்திருக்கிறார். மலையாள படங்கள் மற்றும் வெப்தொடர்களிலும் தொடர்ந்து நடித்துள்ளார்.
மேலும் படிக்க: என்னடா பொசுக்குன்னு முடிச்சுட்டாங்க.. அதிரடியாக முடிவுக்கு வரும் Vijay TV ஃபேவரட் தொடர்..!
இவர் கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் தன்னுடைய சகோதரனுடன் பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாலையில் கிடந்த அவரை அங்கிருந்த சிலர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மூன்று வாரங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், அருந்ததிராய் இருந்து வருகிறார்.
மேலும் படிக்க: இது கதைக்கு செட்டாகாது.. பிரபல நடிகையை துரத்திவிட்ட பார்த்திபன்..!
அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தினமும் 2 லட்சம் ரூபாய் செலவாகும். இதுவரை 40 லட்சத்திற்கு மேல் செலவு செய்யப்பட்டு விட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நிதி உதவி அளிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.