இந்த வயசுல உனக்கு பொண்ணு கேக்குதா?.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் வேதனை..!
Author: Vignesh10 April 2024, 1:38 pm
சினிமா பெயரில் பல சாதனைகளை படைத்த பாலு மகேந்திராவின் சொந்த வாழ்க்கை மிகவும் சிக்கலாகவே இருந்தது. மூன்று திருமணங்களை செய்தார். முதலில் ஷோபனா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் சில பல காரணங்களால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த உறவில் இருந்தபோதே நடிகை மௌனிகாவையும் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் படிக்க: விவாகரத்து செய்ய முடிவா?.. ரவீந்தரின் சோகமான பதிவால் கேள்வி எழும்பிய நெட்டிசன்கள்..!
இவர் பாலு மகேந்திரா மீதும் சினிமா மீதும் காதல் வயப்பட்டதால் 28 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதனையடுத்து, 2014 ஆம் ஆண்டு இவர்கள் திடீரென பிரிந்து அதிர்ச்சியை கொடுத்தனர். இதனை அடுத்து இவர்கள் பிரிந்த நிலையில் சில வருடங்களில் பாலு மகேந்திரா உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், முன்னதாக தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி இயக்குனர்களாக வளம் வருகிற வெற்றிமாறன், பாலா போன்றவர்கள் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள். தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு தனி அடையாளத்தை விட்டு சென்றுள்ளார் பாலு மகேந்திரா. சக்தி என்பவரை தத்து எடுத்து வளர்ப்பு மகளாக வளர்த்தார்.
மேலும் படிக்க: நடப்பவை எல்லாம் நன்மைக்கே.. சண்டைகளை மறந்து விஷ்ணு விஷாலுடன் கைகோர்த்த சூரி..!
இந்நிலையில், அவரது வளர்ப்பு மகள் பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், சினிமா ஆர்வம் இருந்ததால் உறவினர் பாலு மகேந்திராவிடம் அறிமுகம் செய்ய பாலு மகேந்திராவை பார்க்க சென்ற போது, அவர் என்னை “மகளே உள்ளே வா” என்று அழைத்தார்.
சில நாட்கள் கழித்து எங்களை திருப்பி அழைத்த போது எனக்கு பெண் குழந்தை இல்லை. பெண் குழந்தையை வளர்க்கணும் என்று ஆசை உள்ளதாகவும், இவளை நான் பார்த்துக் கொள்ளட்டுமா என்று என் அம்மாவிடம் கேட்டார். அதை தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை அவர் உடனே இருந்தேன். அப்போது, எனக்கு வயது 11 இருக்கும் அப்பா இறந்த சில மாதங்களில், பாலு மகேந்திரா என்மீது பாசமாக இருந்தார்.
என்னை நன்றாக கவனித்துக் கொண்ட பாலு மகேந்திராவிடம் இந்த வயசுல உனக்கு பொண்ணு கேட்க்குதா என எல்லாரும் தப்பா பேசினாங்க, அது எங்கள் இருவருக்குமே தெரியும். எங்கள் உறவை யாருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் தெரிவித்துள்ளார்.