திருமணத்துக்கு முன்பு விபூதி அடித்த எக்ஸ்.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சன்னி லியோன்..!
Author: Vignesh10 April 2024, 3:12 pm
இந்தியாவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 54.5 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

தன்னுடன் ஆபாச படத்தில் நடித்த டேனியல் வெப்பர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு வளர்ப்பு பிள்ளை, வாடகை பிள்ளை என மொத்தம் மூன்று குழந்தைகள். தொடர்ந்து, திரைப்படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, சன்னி லியோன் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
அதில் அவர், என்னுடைய திருமணத்திற்கு முன்பு ஒருவரை காதலித்தேன். அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடந்தது. ஆனால், என்னை அவர் ஏமாற்றுவது போல் ஒரு தருணத்தில் உணர்ந்தேன். ஹவாய் தீவுகளில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தோம். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று வேண்டாம் என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டார்.
மேலும் படிக்க: இந்த வயசுல உனக்கு பொண்ணு கேக்குதா?.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் வேதனை..!
என்னுடைய இதயமே அந்த சமயத்தில் நொறுங்கி விட்டது போல் உணர்ந்தேன். இதையடுத்து, கடவுள் என்னுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தார். டேனியல் வெபரை அறிமுகப்படுத்தினார். டேனியலை திருமணம் செய்து கொண்ட பிறகு என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது என்று சன்னிலியோன் தெரிவித்துள்ளார்.