அரசு மருத்துவப் பணியாளர்கள் இனி ஷிப்ட் அடிப்படையில் பணி : வெளியானது அரசாணை!

Author: Udayachandran RadhaKrishnan
18 மே 2024, 5:43 மணி
GH
Quick Share

அரசு மருத்துவப் பணியாளர்கள் இனி ஷிப்ட் அடிப்படையில் பணி : வெளியானது அரசாணை!

தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை (1 shift) என்றும், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை (2 shift) மற்றும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை (3 shift) எனவும் நேரம் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 10ம் வகுப்பில் 60% மதிப்பெண் எடுத்த சிறப்பு குழந்தை.. புறக்கணிக்கும் பள்ளிகள்.. TCயுடன் பள்ளிகளுக்கு அலையும் தாய்!

மேலே குறிப்பிட்டபடி, Shift Base அடிப்படையில் சுழற்சி பணியாக வழங்கவும். மேலும், பணியில் உள்ள செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களில் (D Group) 50 சதவீதம் பேர் முதல் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர் இரண்டாம் சுழற்சியிலும் மற்றும் 25 சதவீதம் பேர் மூன்றாம் சுழற்சியிலும் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 243

    0

    0