சாலையின் வளைவில் திரும்பிய பைக்.. எதிரே வந்த பேருந்து : நொடியில் நடந்த கோர விபத்து.. ஷாக் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan7 ஜூன் 2024, 8:22 மணி
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்து சக்கரத்தில் சிக்கி இரு சக்கர வாகனம் ஓட்டி சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழிக்கு பழி? ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல்!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூர் செல்லும் சாலையில் பரப்பூர் என்ற இடத்தில் முகமது ஜாஃபர் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது வளைவு ஒன்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து சக்கரத்திற்கு உள்ளே சிக்கி இளைஞர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
0
0