என் ஓட்டு ஜெயம் ரவிக்குதான்;அழகு இருந்தா போதுமா? பாடகி சொன்ன சர்ச்சை கருத்து
Author: Sudha2 ஜூலை 2024, 4:08 மணி
தமிழ் சினிமாவில் தற்போது பிரிவு சர்ச்சையில் சிக்கி இருப்பவர்கள் ஜெயம் ரவி ஆர்த்தி- தம்பதி
இவர்களின் பிரிவுக்கு மாமியார்தான் தான் காரணம் வளர்ப்பு மகன் ஷங்கர் தான் எல்லாவற்றையும் செய்து விட்டார் என பலரும் பலவிதமாக கருத்து சொல்லி வந்தனர்
தமிழ் சினிமா குறித்து எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் பாடகி சுசித்ரா தன்னுடைய யூடியூப் சேனலில் இது பற்றி பேசி இருக்கிறார்
ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்தில் நான் ஜெயம் ரவி பக்கம் தான் நிற்பேன்.ஆர்த்தி ஆடம்பரத்தில் மிக விருப்பம் உடையவர்.அவரை திருப்தி படுத்த ஜெயம் ரவி இரவும் பகலும் உழைக்க வேண்டும். அவர் வீட்டிற்கு போனாலும் ஆர்த்தி என்ன மன நிலையில் இருப்பார் என்றே தெரியாது.
ஜெயம் ரவியின் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம்.ஆர்த்தி அழகாக இருப்பதால் இவ்வளவு நாட்கள் அவர் முகத்தை பார்த்து வாழ்ந்து விட்டார். ஆனால் அழகும் எத்தனை நாளுக்கு இருக்கும் என சொல்லியிருந்தார்
0
0