பானி பூரி பிரியர்களே.. உஷாரா இருந்துக்கோங்க : புற்றுநோய் வர வாய்ப்பு? ஆய்வில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2024, 6:22 pm

இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி உள்ளது. முதலில் இந்த உணவு வட மாநிலங்களில் மக்களின் விரும்பப்படும் உணவாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த உணவு வட மாநில மக்கள் மூலம் தமிழகத்தில் வந்தது. இதன் மூலம் தமிழகத்திலும் பானி பூரியை மக்களின் விரும்பத்தக்க உணவாக மாறியது. அந்த வகையில் சாலையோரம் உள்ள பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தியது.

சோதனையின் முடிவில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியது. அந்த வகையில் சாலையோரம் உள்ள பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தியது.

சோதனையின் முடிவில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் ஆணை பிறபிக்கப்பட்டது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?