அயோத்தி அழைத்துச் செல்வதாக மோசடி.. விமான நிலையத்தில் காத்திருந்த 106 பேர் : மதுரையில் பக்..பக்..!!

Author: Udayachandran RadhaKrishnan
12 ஜூலை 2024, 1:15 மணி
Fligh
Quick Share

மதுரையில் இருந்து அயோத்தி சுற்றுலா செல்வதற்காக இண்டிகோ விமானம் மூலம் 106 பயணிகளை அழைத்துச் செல்வதற்காக கூறி சேலம் ஜே.பி. டிராவல்ஸ் நிறுவனம் தலா 1 நபருக்கு விமான கட்டணம் தங்கும் வசதி உள்பட பணம் 29 ஆயிரம் வசூல் செய்து செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இன்டிகோ விமானம் மூலம் மதுரையில் இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து அயோத்தியா செல்வதற்காக 106 பயணிகள் விமான நிலையம் வந்தடைந்தனர்.

106 பயணிகள் அனைவரும் பெங்களூரு செல்ல இண்டிகோ விமான நிறுவனத்தில் கேட்டனர் . அப்படி எதுவும் புக்ஸ் செய்யப்படவில்லை என அதிகாரிகள் எடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சேலம் ஜே.பி. டிராவல்ஸ் மேலாளார் ராஜா பயணிகளிடம் கலந்து பேசி வரும் 18ம் தேதி 106 பயணிகளையும் அயோத்தி அழைத்து செல்வதாக கூறியதையடுத்து பயணிகள் சமாதனம் அடைந்தனர். பின்னர் 106 பயணிகளும் சேலம் புறப்பட்டு சென்றனர்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 269

    0

    0