பள்ளி மாணவனை கடத்திய விவகாரம்.. போடியில் சிக்கிய முக்கிய குற்றவாளி : கும்பலுக்கு வலை வீசும் போலீஸ்!
Author: Udayachandran RadhaKrishnan12 ஜூலை 2024, 4:31 மணி
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவரது 15 வயது மகன் நேற்று கடத்தப்பட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே இறக்கி விடப்பட்ட நிலையில் இது தொடர்பாக எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த செந்தில் என்பவரை போடியில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாகவும் மற்ற குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் தரப்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
Views: - 223
0
0