பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.. பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பரபரப்பு ட்வீட்!

Author: Udayachandran RadhaKrishnan
24 ஜூலை 2024, 4:52 மணி
CM Stalin
Quick Share

முதலமைச்சர் தனது X சமூகவலைதளப் பக்கத்தில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் #INDIA கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே… “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

மேலும் படிக்க: 25 எம்பிக்களை ஜெயிக்க வெச்சிருந்தா பட்ஜெட்டில் தமிழ்நாடு வந்திருக்கும் : அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 123

    0

    0