ஷாலினிக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை… அத பண்ணவே கூடாதாம் – வேதனையில் அஜித்!

Author:
29 ஜூலை 2024, 6:05 மணி
Quick Share

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்த அஜித் அதன் இடைவேளையில் இருந்து ஷாலினியை பார்க்க சென்னைக்கு வந்தார்.

பின்னர் சில நாட்கள் ஷாலினி உடனிருந்து கவனித்துக் கொண்டார் அஜித். இது குறித்து தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப்… ஷாலினிக்கு அஜித் போன்ற கணவர் வாய்த்ததெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் ஷாலினி போன்ற மனைவி அஜித்திற்கு அமைந்ததும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார் .

இத்தனை ஆண்டுகளில் திருமண வாழ்க்கையில் ஷாலினியின் பிறந்தநாளுக்கு அஜித் வாழ்த்து கூற மறந்ததே கிடையாது என சுட்டிக்காட்டி பேசிய அவர் அண்மையில் தன்னுடைய பிறந்த நாளை அஜித்துடன் இணைந்து ஷாலினி கொண்டாடியதை பார்க்க முடிந்தது என்றார்.

இப்படியான நேரத்தில் தான் ஷாலினிக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருப்பதாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சில தினங்களில் இயல்பு நிலைக்கு ஷாலினி திரும்புவார் என மருத்துவர்கள் கூறி இருந்தனர் .

ஆனால், அவர் வாழ்க்கையில் அதிகமான வெயிட் தூக்கவே கூடாது என்பதே இந்த அறுவை சிகிச்சையில் இருந்து அவர் விரைவில் குணமாவதற்கு முக்கியமாக இருக்கும் என டாக்டர்கள் கூறியதாக சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.

இதனால் ஷாலினி வெயிட் தூக்குவது போன்ற எந்த வேலையும் செய்யக் கூடாது. இதில் அஜித்தும் அதிக கவனத்தை செலுத்தி அவரை கவனித்துக்கொள்கிறாராம். மேலும், அவர் இதனால் வேதனையில் இருப்பதாக கூட சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 133

    0

    0