குடுத்தது 100 போட்டது 500:நியாயமா இது?விவசாயி போட்ட சமூக வலைதள பதிவால் பரபரப்பு..!!

Author: Sudha
7 ஆகஸ்ட் 2024, 11:29 காலை
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவர் விவசாயம் சார்ந்த இடுப்பொருள் வாங்க சங்கராபுரம் நகரப் பகுதிக்கு வந்துள்ளார்.மீண்டும் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு செல்லும் போது அவருடைய இருசக்கர வாகனத்தில் திடீரென பெட்ரோல் தீர்ந்து போனதால் அதே இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தனியார் பெட்ரோல் பங்க் சென்று நூறு ரூபாய் கொடுத்து ஒரு லிட்டர் பிடிக்கக் கூடிய வாட்டர் கேனில் பெட்ரோல்
வாங்கியுள்ளார்.

அப்போது அரை லிட்டர் -500ML பெட்ரோல் மட்டுமே வந்துள்ளது இதைப் பார்த்து அதிர்ந்து போனார் விவசாயி ஏழுமலை.அங்கு பெட்ரோல் பங்க் ஊழியரிடம் நான் நூறு ரூபாயை கொடுத்தேன் எனக்கு அரை லிட்டர் பெட்ரோல் மட்டுமே வந்துள்ளது இது எப்படி சாத்தியம் எனக் கேட்டார்.அதற்கு அவர் அசால்டாக இஷ்டமான இருந்தா போடு இல்லைனா போயிட்டே இரு நான் என்ன பண்றது அப்படி தான் வருது என கூறியதாக சொல்லப்படுகிறது.

விவசாயி ஏழுமலை அங்கு பெட்ரோல் போட வந்த மக்களிடம் யாரும் போடாதீர்கள் 100 ரூபாய் பெட்ரோல் போட்டால் அரை லிட்டர் பெட்ரோல் மட்டுமே வருகிறது எனக் கூறியுள்ளார்.மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி தன்னுடைய செல்போனில் பதிவு செய்து கொண்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 171

    0

    0