அரோகராவும் சொல்லுவோம்… ஜெய்ஸ்ரீ ராம்னும் சொல்லுவோம் : அண்ணாமலைக்கு அமைச்சர் கொடுத்த பதிலடி..!!

Author: Sudha
8 ஆகஸ்ட் 2024, 1:29 மணி
Quick Share

உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை முருகர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு –பழனியில் வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

மாநாடு நடைபெறும் மேன்மைத்தலம் பழனி,
முத்தமிழ்க் கடவுள் என்னும் முருகப் பெருமானின் மூன்றாவது படை வீடு திருவாவினன்குடி.

முருகனைக் கனவிலும் நனவிலும் கண்டு “அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை” என்று ஏத்துவதுடன் மிக அதிகமான பாடல்களைப் பழனிக்கு அருளியுள்ளார் அருணகிரிநாதர்.

நாடோறும் அருவமாக இருமுறை அருந்தமிழால் அகத்தியர் வழிபடுவதாகவும் அருளுகிறார் அருணகிரிநாதர்.

‘தமிழில் பாடல் கேட்டருள் பெருமாளே’ என்கிறது பழனித் திருப்புகழ்.

ஏகராகிய முருகப்பெருமானை போகர் கோயில் கட்டி தமிழில் வழிபட்ட இடம் பழனி மலை. அங்கு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது x தளப் பதிவில் இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது”பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது””ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்””கோவிந்தா கோவிந்தா என்றாலும் ஏற்றுக்கொள்வோம், ஓம் முருகா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்””

முருகன் மாநாடு பொதுவானது- மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை வரவேற்கிறோம்””இதையே வரவேற்பாக ஏற்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாநாட்டில் பங்கேற்கலாம்””முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பார்கள்””முதல்வர் பங்கேற்பது ஓரிரு நாளில் உறுதி செய்யப்படும் என பதிவிட்டுள்ளார்.

  • Vanathi தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!
  • Views: - 226

    0

    0