மத்திய அரசு நிதியை குறிப்பிடாதது ஏன்? திட்டமிட்டே மறைத்துள்ளார் CM ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
18 ஆகஸ்ட் 2024, 4:49 மணி
CM
Quick Share

சென்னை அருகே உள்ள வல்லம் – வடகலில், ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்காக 707 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், மலிவு விலை வாடகை வீடுகள் வளாக திட்டத்தை 2020-ல் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாக தெரிவித்துள்ளார்.

வல்லம்-வடகலில் திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி மத்திய அரசு மானியத்துடன், வங்கியில் கடன் பெற்று கட்டப்பட்டுள்ளது எனக்கூறியுள்ள அவர், மலிவு விலை வாடகை வீடு வளாக திட்டத்தை மக்களிடம் தெரிவிக்காமல் வழக்கம்போல முதலமைச்சர் புறக்கணித்துள்ளாரா என அண்ணாமலை வினவியுள்ளார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 179

    0

    0