AI மூலம் உதயமான கலைஞர் கருணாநிதி.. மகன் அருகே அமர்ந்து உரை : முப்பெரும் விழாவில் சிலிர்த்த திமுகவினர்..!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 7:03 pm

திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும்.

இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க: பெரியார் சிலைக்கு மரியாதை அளிக்க வந்த விஜய்.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!!

அதன்படி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் நிலையில் விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

திமுக முப்பெரும் விழாவில் இருபெரும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு நாற்காலியில் AI மூலம் கலைஞர் கருணாநிதி அமர்ந்து உரையாற்றினார்.அருகே முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். இந்த காட்சியை பார்த்த திமுகவினர் சிலாகித்துள்ளனர்-

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!