ஐஸ்வர்யாவுடன் மீண்டும் வாழ விரும்பும் தனுஷ் – நடந்த சம்பவத்தை சொன்னால் ஷாக் ஆகிடுவீங்க!

Author:
17 செப்டம்பர் 2024, 8:06 மணி
dhanush - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் தனுஷ் சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

dhanush-aishwarya

திருமணத்திற்கு பிறகு அவரவர் தங்களது கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி கனவை நோக்கியும் இலட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென இவர்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும் ஒரு பேச்சுக்களும் அடிபட்டு வந்திருந்தன. ஆனால் சிலர் இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக மனைவி ஐஸ்வர்யா சில வாரங்களுக்கு முன்னர் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு கணவர் தனுஷ் லைக் போட்டிருந்தார் .

இதையும் படியுங்கள்: அவங்கலா நல்லா பண்றாங்க எனக்கு ஏன் வரல? – ஸ்டேஜில் கலங்கி அழுத மணிமேலை – வைரல் வீடியோ!

இதுவே அவர்கள் மீண்டும் இணைவதற்கான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஓணம் கொண்டாடிய புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது instagramல் பதிவிட அதற்கும் தனுஷ் லைக் போட்டு இருக்கிறார்.

அதை பார்த்து ரசிகர்கள் நிச்சயம் தனுஷ் ஐஸ்வர்யா சேர்ந்து வாழ அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறி வருகிறார்கள். எது எப்படியோ இதெல்லாம் நடந்தால் நல்ல விஷயம் தானே என அவரது ரசிகர்கள் தெரிவித்தார்கள்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 278

    0

    0