அதிகாலையில் அலறிய குழந்தைகள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் : நள்ளிரவில் நடந்த கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 செப்டம்பர் 2024, 12:59 மணி
Wife Murder
Quick Share

ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைக் கண்டு அலறிய குழந்தைகளின் சத்தத்தை கேட்டு வந்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த மூடினாம்பட்டி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயசு44) சசிகலா (வயது34) இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் இருவரும் தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்

மனைவி மீது சந்தேகம் அடைந்து கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தில் தினமும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றி ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியதில் மனைவி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்

இதையும் படியுங்க: முதலமைச்சர் தனது சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடுகிறார் : முன்னாள் பெண் அமைச்சர் சரமாரி புகார்!

இவரின் பிள்ளைகள் காலை தூங்கி எழுந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் இறந்த தாயைக் கண்டு கதறிய குழந்தைகளின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து கேவிகுப்பம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்

தகவலின் பேரில் விரைந்து வந்த கேவிகுப்பம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மனைவியை கொலை செய்து விட்டு அங்கே சுற்றித்திரிந்த தியாகராஜனை கைது செய்து கே வி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

காதல் மனைவி மீது சந்தேகம் அடைந்து ஆத்திரத்தில் கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 111

    0

    0