தொழிலாளிகளின் முதலாளி…. இந்தியாவின் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய ரத்தன் டாடாவின் கடைசி வா்ாத்தைகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 அக்டோபர் 2024, 10:42 காலை
Ratan Tata
Quick Share

தொழிலாளிகளின் முதலலாளி, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வயதில் காலமானார்.

முதுமை என்பது எண்ணிக்கைதான் என்பதை நிரூபித்து காட்டியவர் ரத்தன் டாடா. எப்போதும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்த இவர், பல தொழிலதிபர்கள் இருந்தாலும் காஷ்மீர் முதல் குமரி வரை ரசிகர்கள் படையே உள்ளனர்.

பலருக்கு முன்மாதிரியாகவும், தொழில் தொடங்கிய பலருக்கு எடுத்துக்காடாக இருந்தவர். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியா முதல் உலகம் முழுவதும் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ரத்தன் டாடாவின் கடைசி இன்ஸ்டாகிராம் வார்த்தைகள் வைரலாகி வருகிறது.

தனது இஸ்டாகிராம் பக்கத்தில் உடல் ஆரோக்கியம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், என்னுடைய உடல்நிலை குறித்து சமீபத்திய வதந்திகள் பரவுவதை நான் அறிவேன், இது ஆதாரமற்றவை என்பதை கூற விரும்புகிறேன், என் வயதுமற்றும் உடல்நிலை காரணமாக மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன்.

நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன், பெருமக்களம், ஊடகங்களும் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அதில் முக்கியமாக இதற்கு தலைப்பாக Thank you for thinking of me என பதிவிட்டிருந்தது தற்போது கவனத்தை பெற்று வருகிறது.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 214

    0

    0

    மறுமொழி இடவும்