தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் தெரிவித்தார்.
விஜய்யின் இந்த தெளிவான அரசியல் பேச்சும் அவரது அரசியல் பயணமும் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டியிருப்பதாக பரவலாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் விஜய் அவர்களின் கொள்கையும் அவரது அரசியல் பயணத்துக்கான நோக்கமும் நல்ல புரிதலும் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது .
இதை அறிந்த மக்கள் பலரும் விஜயகாந்த்தை தான் நாம் விட்டுவிட்டோம். மீண்டும் விஜயகாந்தைப் போன்று ஒரு நல்ல நேர்மையான அரசியல் கட்சி தலைவராக விஜய் ஜொலிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து அவர் சிறந்த முறையில் ஆட்சி செய்ய வாழ்த்துக்கள் என மக்களே அவருக்கு ஆரவாரம் செலுத்தி வருகிறார்கள்.
0
0