கமல் கேரவனுக்குள் முக்கிய புள்ளிகள்… கண்ணை கவரும் சொகுசு வசதிகள்..!
Author: Selvan12 February 2025, 12:55 pm
கமல்ஹாசன் கேரவனில் முக்கிய அரசியல்வாதிகள்
சினிமா நடிகர்,நடிகைகள் தற்போது எங்கே படப்பிடிப்பு நடந்தாலும் தங்களுக்கென்று தனித்தனி கேரவன்களை வைத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் கேரவன் புழக்கம் எப்படி வந்தது என பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்,அதிலும் குறிப்பாக கமல்ஹாசனின் கேரவனை பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
![Tamil cinema caravan culture](https://ffebb5a0.delivery.rocketcdn.me/wp-content/uploads/2025/02/kamal2.jpg)
அதில் அவர் கூறியது 2010 ஆம் ஆண்டிற்கு பிறகே கேரவன் நடைமுறைப்படுத்தப்பட்டது.அப்போது ஆரம்பத்தில் ரஜினி,கமல் போன்ற முக்கிய நடிகர்கள் மட்டுமே கேரவனை பயன்படுத்தி வந்தார்கள்,ஆனால் இப்போது ஒவ்வொருவரும் 4 அல்லது 5 கேரவன்களை படப்பிடிப்பு தளத்திற்கு எடுத்து செல்கிறார்கள்,அந்த அளவிற்கு படங்களின் விற்பனையும் அதிகமா இருப்பதால்,படக்குழுவும் அதை ஏற்று கொள்கிறது.
இதையும் படியுங்க: இதுக்கெல்லாம் இனி நான் பொறுப்பல்ல.. திரிஷா முடிவு : ரசிகர்கள் ஷாக்?
முதன்முதலில் 3 கேரவன்களை வாங்கி படப்பிடிப்பிற்கு வாடகைக்கு விட்டவர் இயக்குனர் மணிவண்ணன் தான்,இப்போது கமல்ஹாசன் பல சொகுசு வசதிகள் கொண்ட ஆடம்பர கேரவனை வைத்துள்ளார்,தூங்குவதற்கு,சமைப்பதற்கு,ஓய்வு எடுக்க என தனி தனி அறைகள் உள்ளன,4 ஏசிகள் பொருத்தப்பட்டு VIP-களை சந்தித்து பேச தனி இடம் உள்ளது,மேலும் மற்ற கேரவன்களில் 500 லிட்டர் தண்ணீர் தான் பிடிக்க முடியும்,ஆனால் கமலுடைய கேரவனில் 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வசதி உள்ளது.
தமிழகத்திற்கு பிரதமர் எப்போதெல்லாம் வாராரோ கமலின் கேரவன் தான் அனுப்பப்படும்,அதே போல தமிழக முதல்வர் வெளியூர் செல்லும் போது கேரவன் ஏதும் தேவைப்பட்டால் கமல்ஹாசனின் கேரவன் தான் பயன்படுத்துகிறார்,இதன் மூலமும் கமல்ஹாசன் வருமானத்தை ஈட்டி வருகிறார் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.