மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!
Author: Hariharasudhan12 March 2025, 7:52 pm
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு ராஜா என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமான நிலையில், மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். ராஜா வெளியூரில் வேலை செய்து வந்துள்ளார். எனவே, பெண் குழந்தைகள் 3 பேரும், தன் தாய் மற்றும் தாத்தா பாட்டியுடன் வளர்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தந்தை இல்லாத இடத்தில் தந்தையாக இருந்து குடும்பத்தை காக்க வேண்டிய தாத்தா சரவணன், அந்த பேத்திகளிடமும், தன்னுடைய மருமகளிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யத் தொடங்கியதாகத் தெரிகிறது. இது மருமகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மாமியாருக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, இருவரும் சேர்ந்து சரவணனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன்படி, மாமியாருடன் சேர்ந்து, மாமனார் சரவணனை மருமகளும் தீயிட்டு எரித்து உள்ளனர். இதனையடுத்து, கேட்ட அலறல் சத்ததில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சரவண்அனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜயைச் சுற்றி 11 CRPF படையினர்.. உளவுத்துறை ரிப்போர்ட் என்ன?
இந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சரவணன், உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனிடையே, காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ராஜாவிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.