வறண்ட, உதிர்ந்த முடி கோடையில் மிகவும் பொதுவான முடி பிரச்சினைகளில் ஒன்றாகும். எனினும், நீங்கள் அவற்றை சமாளிக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை – ஒரு எளிய தீர்வு ஒன்று உள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வறண்ட, உதிர்ந்த முடியை வெறும் இரண்டு பொருட்களைக் கொண்டு “பளபளப்பான முடியாக” மாற்றலாம் – நெல்லிக்காய் பொடி மற்றும் ஆமணக்கு எண்ணெய்.
இதை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:-
நெல்லிக்காய் தூள்
தண்ணீர்
10 மில்லி – ஆமணக்கு எண்ணெய்
முறை:
நெல்லிக்காய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். அதில், உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து, 10 மில்லி ஆமணக்கு எண்ணெயைச் சேர்க்கவும்.
எப்படி பயன்படுத்துவது?
பேஸ்ட்டை உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும். 15-20 நிமிடங்கள் வைத்திருங்கள்.
சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும்.
6-8 மணி நேரம் கழித்து அல்லது அடுத்த நாள் ஷாம்பு போடுங்கள். பேஸ்ட் முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது.
உச்சந்தலையில் மற்றும் உடலில் ஏற்படும் அரிப்புகளை எதிர்கொள்ள:
* கொதிக்கும் நீரில் வேப்ப இலைகளை சேர்க்கவும். பின்னர் இந்த தண்ணீரை குளிக்கும் நீரில் சேர்க்கவும்.
* தினமும் 4-5 வேப்ப இலைகளை மென்று சாப்பிடுங்கள்.
கூடுதலாக அதிகப்படியான உப்பு மற்றும் புளிப்பு பொருட்களை கோடையின் உச்சத்தில் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.