முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானதாக இருப்பது மட்டும் அல்லாமல், ஆரோக்கியமானதும் கூட. வாழைப்பழம் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆகையால் இது வறண்ட முடி மற்றும் சருமம் கொண்டவர்களுக்கு சிறப்பாக வேலை செய்கிறது. தலைமுடிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் வாழைப்பழத்தில் உள்ளன. எனவே, உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால், சரியான முடி பராமரிப்புப் பொருளைத் தேடுவதை விட்டு விட்டு, இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். உங்கள் தலைமுடி பிரச்சினைகளை சமாளிக்க உதவும் சில
வாழைப்பழ ஹேர் மாஸ்க்.
வாழைப்பழம் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்
• இரண்டு பழுத்த வாழைப்பழங்களை மசித்து பேஸ்டாக்கி கொள்ளவும். இதனுடன் தயிரை சேர்க்கவும்.
• இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை உச்சந்தலையில் தடவலாம்.
வாழை மற்றும் தேன் முடி மாஸ்க்
• மசித்த வாழைப்பழத்தை தேனுடன் கலக்கவும், இது உச்சந்தலையில் வறட்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் முடி மீண்டும் வளரும்.
• 15 நிமிடம் உங்கள் தலையில் வைத்து பிறகு கழுவவும்.
வாழைப்பழம், பப்பாளி மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
• முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கும் ஃபோலிக் அமிலத்தை கொண்டுள்ள வாழைப்பழம் மற்றும் பப்பாளியை சிறிய துண்டுகளாக நறுக்கி பிசைந்து கொள்ளவும்.
• அதனுடன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆகும் வரை கலக்கவும்.
• அதை உங்கள் உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.