Categories: அழகு

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் முடி உதிர்தலை சமாளிப்பது எப்படி…???

ஒரு குழந்தையைப் பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு அதிகமான முடி உதிர்தல் பிரச்சினையை பல பெண்கள் எதிர்கொள்கின்றனர். கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு, ஒரு பெண்ணின் உடல் பல ஹார்மோன் மாற்றங்களுக்கு உட்படுகிறது. இது முடி வளர்ச்சியையும் பாதிக்கிறது மற்றும் சில சமயங்களில் முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.

புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் பொதுவாக குழந்தை பிறந்து மூன்று முதல் ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதிகப்படியான முடி உதிர்வை எதிர்கொள்கின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இது மிகவும் சாதாரணமானது மற்றும் சில மாதங்களுக்கு இந்த நிலை தொடரலாம்.

பிரசவத்திற்குப் பின் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த சில குறிப்புகளை பார்க்கலாம். பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு முதல் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்களுக்குள் முடி உதிர்தல் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஹார்மோன் அளவு குறைவதே முக்கிய காரணம்.

குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் தங்கள் மகளிர் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் இரும்பு மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதை நிறுத்தக்கூடாது. போதுமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும், நெய் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்த்து புரதச் சத்துகளை அதிகப்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த கட்டத்தில் இரும்பு, கால்சியம், பி-வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. உங்கள் உணவில் போதுமான புரதத்தை சேர்த்துக்கொள்வதை உறுதி செய்வது நல்லது. கூடுதலாக, போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். இதனை செய்வதன் மூலம் உங்கள் முடி உதிர்தல் கட்டுக்குள் இருக்கும்.

பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்வைக் குறைக்க நீங்கள் பின்பற்றக்கூடிய வேறு சில குறிப்புகள்:-
சமச்சீரான உணவை சாப்பிடுங்கள்:
உங்கள் உடல் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை உறுதிசெய்ய உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான புரதங்களைச் சேர்க்கவும்.

இரசாயன பொருட்களை தவிர்க்கவும்:
உங்கள் தலைமுடியை தேவைப்படும்போது இயற்கை வகை ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். அதிகப்படியான சிக்கலைக் குறைக்க அகலமான பல் சீப்பைப் பயன்படுத்தவும். ரசாயன முடி தயாரிப்புகளை விட்டு விட்டு இயற்கையான பொருட்களை கூந்தலில் பயன்படுத்த முயற்சிக்கவும்.

மன அழுத்தத்தைக் குறைத்து நன்றாக தூங்குங்கள்:
பாலூட்டும் தாய்மார்கள் குறைவான மன அழுத்தத்தையும் போதுமான தூக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

11 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

11 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

12 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

13 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

13 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

13 hours ago

This website uses cookies.