Categories: அழகு

கருவளையம் நிரந்தரமா மறைய என்ன தான் பண்றது…???

நமது ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது சருமத்திற்கு கொடுத்திருந்தாலே முகப்பருவிற்கான வைத்தியங்கள் என்ன, கருவளையத்தை போக்குவது எப்படி, பாத வெடிப்பு மறைய என்ன செய்யலாம் போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம். அதிலும் கண்களைச் சுற்றி இருக்கக்கூடிய சருமம் மிகவும் சென்சிடிவானது. இதற்கு கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இதனை நாம் செய்ய தவறி விடுவதால் கருவளையங்கள் உருவாகிறது. இன்று பலர் கருவளையம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக நேரம் மொபைல் லேப்டாப் போன்றவற்றை பார்ப்பது, மோசமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, போதுமான தூக்கம் பெறாமல் இருப்பது போன்றவை கருவளையத்தை ஏற்படுத்துகின்றன. கருவளையம் மறைய என்னென்ன சிகிச்சைகளை பின்பற்றலாம் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு கருவளையம் எந்தெந்த காரணங்களுக்காக உருவாகிறது என்பதை
அறிவதன் மூலம் எதிர்காலத்தில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கருவளையங்கள் தோன்ற காரணம்:
இரவு நேரத்தில் நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் அதிகமாகிறது. கண்களுக்கு அருகில் உள்ள தோலானது மிகவும் மெல்லியதாக இருப்பதால், கண்களைச் சுற்றி கருநிற வளையம் உண்டாகிறது. உடலானது அதிக அளவில் மெலனின் உற்பத்தி செய்யும் போதும் கருவளையம் உண்டாகிறது.

ஒரு சிலருக்கு கண்களுக்கு கீழே குறைவான கொழுப்பு திசுக்கள் காணப்படும் அல்லது கண்களை சுற்றி உள்ள தோல் மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கருவளையமாக தோன்றும்.

நமது உடலில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் அது ரத்த சோகையை ஏற்படுத்தும். கருவளையம் ரத்த சோகைக்கான ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது.

கருவளையத்தை மறைய செய்வதற்கான இயற்கை சிகிச்சைகள்:-
பப்பாளியில் ஏராளமான வைட்டமின்கள் காணப்படுகிறது. அதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இவை கண்களை சுற்றி உள்ள சருமத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. அதோடு வைட்டமின் சி சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. ஆகவே பப்பாளியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்களை சுற்றி உள்ள கருவளையம் இயற்கையாகவே மறைந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் தக்காளி சாற்றினை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை என கண்களைச் சுற்றி தடவி வந்தால் கருவளையங்கள் மறையும்.

உருளைக்கிழங்கு சாற்றை காட்டன் பந்தில் நனைத்து கண்களை சுற்றி உள்ள சருமத்தில் தடவுங்கள். இதனை 10 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் மறையும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…

49 minutes ago

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம்.. வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள் யார்?

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…

1 hour ago

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

14 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

14 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

15 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

17 hours ago

This website uses cookies.