Categories: அழகு

கருவளையம் நிரந்தரமா மறைய என்ன தான் பண்றது…???

நமது ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது சருமத்திற்கு கொடுத்திருந்தாலே முகப்பருவிற்கான வைத்தியங்கள் என்ன, கருவளையத்தை போக்குவது எப்படி, பாத வெடிப்பு மறைய என்ன செய்யலாம் போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம். அதிலும் கண்களைச் சுற்றி இருக்கக்கூடிய சருமம் மிகவும் சென்சிடிவானது. இதற்கு கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இதனை நாம் செய்ய தவறி விடுவதால் கருவளையங்கள் உருவாகிறது. இன்று பலர் கருவளையம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக நேரம் மொபைல் லேப்டாப் போன்றவற்றை பார்ப்பது, மோசமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, போதுமான தூக்கம் பெறாமல் இருப்பது போன்றவை கருவளையத்தை ஏற்படுத்துகின்றன. கருவளையம் மறைய என்னென்ன சிகிச்சைகளை பின்பற்றலாம் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு கருவளையம் எந்தெந்த காரணங்களுக்காக உருவாகிறது என்பதை
அறிவதன் மூலம் எதிர்காலத்தில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கருவளையங்கள் தோன்ற காரணம்:
இரவு நேரத்தில் நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் அதிகமாகிறது. கண்களுக்கு அருகில் உள்ள தோலானது மிகவும் மெல்லியதாக இருப்பதால், கண்களைச் சுற்றி கருநிற வளையம் உண்டாகிறது. உடலானது அதிக அளவில் மெலனின் உற்பத்தி செய்யும் போதும் கருவளையம் உண்டாகிறது.

ஒரு சிலருக்கு கண்களுக்கு கீழே குறைவான கொழுப்பு திசுக்கள் காணப்படும் அல்லது கண்களை சுற்றி உள்ள தோல் மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கருவளையமாக தோன்றும்.

நமது உடலில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் அது ரத்த சோகையை ஏற்படுத்தும். கருவளையம் ரத்த சோகைக்கான ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது.

கருவளையத்தை மறைய செய்வதற்கான இயற்கை சிகிச்சைகள்:-
பப்பாளியில் ஏராளமான வைட்டமின்கள் காணப்படுகிறது. அதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இவை கண்களை சுற்றி உள்ள சருமத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. அதோடு வைட்டமின் சி சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. ஆகவே பப்பாளியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்களை சுற்றி உள்ள கருவளையம் இயற்கையாகவே மறைந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் தக்காளி சாற்றினை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை என கண்களைச் சுற்றி தடவி வந்தால் கருவளையங்கள் மறையும்.

உருளைக்கிழங்கு சாற்றை காட்டன் பந்தில் நனைத்து கண்களை சுற்றி உள்ள சருமத்தில் தடவுங்கள். இதனை 10 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் மறையும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

3 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

5 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

5 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

6 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

6 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

7 hours ago

This website uses cookies.