வறண்ட சருமம் பொதுவாக நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று என்றாலும் இது நமக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும். ஆனால், வறண்ட சருமத்தை சரி செய்து சருமத்தின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பல வழிகள் உள்ளன. அவை:
முதலில் நாம் எளிதில் செய்யக் கூடியது ஆனால் பெரும்பாலும் நாம் செய்யத் தவற விடுவது போதுமான அளவு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதே ஆகும். சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
அது போல நாம் பின்பற்றத் தவறும் இன்னொரு விஷயம் மென்மையான சோப்களை பயன்படுத்துவது ஆகும். நம்மை ஈர்க்கும் விளம்பரங்களைப் பார்த்து அல்லது வாசனையால் ஈர்க்கப்பட்டு நாம் சோப்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துவது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.வறண்ட சருமமா இருந்தால் வாசனை அற்ற ஜென்டில் ஆன சோப்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
அடுத்து நாம் சூடான தண்ணீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தால், அதனை கண்டிப்பாக உடனே நிறுத்த வேண்டும். சூடான நீரில் குளித்து வந்தால், அது நம் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை இழக்கச் செய்து விடும். சூடான நீருக்கு பதில் எப்பொழுதுமே வெது வெதுப்பாக உள்ள தண்ணீரை மட்டுமே குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
அதே போல் மாய்ஸ்சரைசரை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். அதாவது குளித்த பிறகு உங்கள் சருமம் சற்று ஈரமாக இருக்கும் போதே, ஈரப்பதத்தைப் தக்க வைத்து கொள்தற்கு ரிச் ஆன கிரீமி ஆன மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்கு பேஷியல் செய்து பழக்கம் இருந்தால், வறண்ட சருமத்திற்கு வாழைப் பழ பேஷியலை முயற்ச்சி செய்து பார்க்கலாம். இரண்டு வாழைப் பழங்களை எடுத்து அவற்றை ஒரு ஸ்பூன் கொண்டு நன்றாக மசித்து அதன் உடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்துகே கொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் வறண்ட முகத்தில் பூசி சுமார் 20 நிமிடங்கள் வரை காய விடவும். 20 நிமிடங்களுக்குப் பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.
இவற்றை செய்வது சுலபம் என்றாலும், நம் வாழ்க்கை முறை காரணமாக இதனை நாம் பின்பற்றத் தவறலாம். ஆனால், இதற்காக நேரம் ஒதுக்கி தவறாமல் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். எல்லாம் சாத்தியமாகும்!
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.