Categories: அழகு

புருவங்களையும் விட்டு வைக்காத பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட குறிப்புகள்!!!

தலைமுடியில் பொடுகு ஏற்படுவதையே பொறுக்க முடியாத நமக்கு புருவங்களில் பொடுகு ஏற்படுவது இன்னும் கொடுமையான விஷயம். இருப்பினும் இதனை நினைத்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இதற்கு எளிமையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அது குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பாதாம் எண்ணெய்:
சில துளிகள் சூடான பாதாம் எண்ணெயைக் கொண்டு உங்கள் புருவங்களை மசாஜ் செய்வது பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட உதவும். இரவில் படுக்கும் முன் இதை செய்யலாம். பாதாம் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் புருவத்தில் முடி உதிர்வதைத் தடுக்கலாம். மறுநாள் காலையில் உங்கள் முகத்தை கழுவ மறக்காதீர்கள்.

கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல் அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும். பொடுகு நிறைந்த புருவங்களில் இருந்து விடுபட சிறிது சுத்தமான கற்றாழை ஜெல்லை உங்கள் புருவங்களில் தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வேப்ப எண்ணெய்:
வேம்பு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது அனைத்து வகையான தோல் பிரச்சினைகளிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இறந்த சருமம் மற்றும் பொடுகைப் போக்க உங்கள் புருவங்களில் சிறிது வேப்பெண்ணெய் தடவவும்.

வெந்தய விதைகள்:
புருவத்தில் பொடுகு உள்ளவர்களில் பெரும்பாலானோர் புருவத்தில் இருந்து முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுவார்கள். வெந்தய விதைகள் அமினோ அமிலங்களால் நிரம்பியுள்ளன. அவை சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டர்களாக செயல்படுகின்றன. வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் பேஸ்டாக அரைத்து அதனை உங்கள் புருவங்களில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

9 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

9 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

10 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

10 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

10 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

11 hours ago

This website uses cookies.