இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வு என்பது பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனையாகும். தினமும் முடி உதிர்வு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதிகப்படியான முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உள்ளது.
எனினும் முடி உதிர்வு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முடி உதிர்வை சமாளிக்க ஏராளமான இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கற்றாழை ஹேர் பேக். கற்றழையானது தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
கற்றாழையில் காணப்படும் குளிர்ச்சியான பண்புகள் மயிர்க்கால்களை ஆற்றி வீக்கத்தை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. அதோடு பொடுகு தொல்லையிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.
இப்போது முடி உதிர்வை சமாளிக்க உதவும் கற்றாழை ஹேர் பேக்கை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கற்றாழை சாறு, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை கட்டிகள் எதுவும் இல்லாதவாறு கலந்து கொள்ளவும். இதனை உங்கள் முடி மற்றும் மயிர்க்கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை வெதுவெதுப்பான நீரில் அலசி கொள்ளலாம்.
இதனை வாரம் இரண்டு முறை பயன்படுத்துங்கள். இதனை அனைத்து வகையான தலைமுடிக்கும் ஏற்றது. இது ஒரு கண்டிஷனராகவும் செயல்படுவதால் இதனை பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கற்றாழையில் தலைமுடி மற்றும் மயிர்க்கால்களை வலிமைப்படுத்தக்கூடிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. மேலும் தலைமுடியின் இயற்கையான ஈரப்பதத்தை பூட்டுவதன் மூலமாக முடி உதிர்வை தடுக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
This website uses cookies.