பழங்காலத்தில் பெண்கள் தங்களுடைய சருமத்தை பராமரிக்கவும், அழகை மெருகேற்றவும் நலங்கு மாவு மற்றும் நலங்கு சோப்பை பயன்படுத்தி வந்தனர். இயற்கையான பொருட்களால் ஆன இந்த நலங்கு மாவு என்பது சரும பராமரிப்புக்கு பல்வேறு பலன்களை அளிக்கிறது. இதனால் தற்போது கமர்ஷியலாகவும் நலங்கு மாவு மற்றும் நலங்கு சோப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. எனினும் கமர்ஷியல் ப்ராடக்டுகளை மட்டுமே நம்பி இருக்காமல் வீட்டிலேயே நாம் நலங்கு சோப்பு செய்து பயன்படுத்தலாம். எனவே இந்த பதிவில் நலங்கு சோப்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
நலங்கு சோப்பு செய்ய தேவையான பொருட்கள்
100-150 கிராம் கிளிசரின் சோப் பேஸ்
ஒரு டீஸ்பூன் அரிசி மாவு
ஒரு டீஸ்பூன் கடலை மாவு
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டீஸ்பூன் முல்தானி மிட்டி
ஒரு டீஸ்பூன் ரோஸ் பவுடர்
3 முதல் 5 பாதாம்
ஒரு டீஸ்பூன் சந்தன பொடி
20 துளிகள் அத்தியாவசிய எண்ணெய்
ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
நலங்கு சோப்பு செய்வது எப்படி?
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பாதாம் பருப்புகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், ரோஸ் பவுடர், முல்தானி மிட்டி மற்றும் சந்தன பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இப்போது நம்முடைய நலங்கு மாவு பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது. உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அளவுகளை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
இப்பொழுது சோப் பேஸை எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி டபுள் பாய்லர் முறையை பயன்படுத்துவதன் மூலமாக ஒரு கிண்ணத்தில் சேர்த்து உருக வைக்கவும்.
சோப் பேஸ் முழுவதுமாக உருகியவுடன் அதில் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஆகியவற்றை சேர்க்கவும்.
பின்னர் நாம் தயார் செய்து வைத்த நலங்கு மாவையும் சேர்த்து நன்றாக கலந்து சமமாக பரப்பவும்.
இப்போது வாசனைக்காக ஒரு சில துளிகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்தவுடன் இந்த கலவையை சோப்பு அச்சில் சேர்க்கவும். சிலிக்கான் அச்சுகளை பயன்படுத்தினால் சோப்புகளை அதிலிருந்து எளிதாக அகற்றி விடலாம்.
இதனை ஒரு இரவு முழுவதும் 7 முதல் 8 மணி நேரம் அப்படியே விடவும்.
சோப்பு முழுவதுமாக செட் ஆனவுடன் அச்சில் இருந்து அகற்றி அதனை பயன்படுத்தலாம்.
குறிப்பு: உங்களுடைய முகத்திற்கு இதனை பயன்படுத்துவதற்கு முன்பு கைகளின் பின்புறத்தில் சோதனை செய்து பார்ப்பது நல்லது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.