வயதாகும் பொழுது முகத்தில் சுருக்கங்கள் கோடுகள் போன்றவை ஏற்படுவது சகஜம் தான். ஆனால் ஒரு சிலருக்கு இளமையாக இருக்கும் பொழுதே முதியவர்கள் போன்ற சுருக்கங்களும், கோடுகளும் தற்போது வரத் தொடங்கியுள்ளன. இந்த பிரச்சனையால் இன்று பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது தவறான உணவு முறை. இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அனைவருக்குமே அழகான, தெளிவான சருமம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். நமது சருமத்தின் அழகை மேம்படுத்த பல்வேறு விதமான முயற்சிகளை நாம் செய்வோம். எனினும், வயதாகும் பொழுது சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படத்தான் செய்யும். இதனை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை நம்மால் நிச்சயமாக தடுக்க முடியும். அதற்கு நீங்கள் ஒரு சில உணவுகளை தவிர்த்தாலே போதும்.
இந்த லிஸ்டில் முதலில் இருப்பது பதப்படுத்தப்பட்ட உணவு. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிக அளவில் காணப்படுகிறது. உணவு விரைவில் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக கெமிக்கல்களும் சேர்க்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக நமது சருமம் சேதமடைகிறது. மேலும் அதிகப்படியான நீர் தேக்கம், கொலாஜன் குறைபாடு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து விலகி இருப்பது சுருக்கங்கள் மற்றும் கூடுகளை தவிர்க்க உதவும்.
அடிக்கடி டீ காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், உங்களுக்கு விரைவாக சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காபியில் காணப்படும் காஃபின் நமது உடலை டீஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல், முகத்தில் உள்ள ஈரப்பதத்தை உறுஞ்சிவிடுகிறது. ஆகவே உங்கள் சருமம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் டீ, காபியை தவிர்ப்பது நல்லது.
அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நல்லதல்ல. சர்க்கரை நமது ரத்தத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸின் அளவை அதிகரிக்கிறது. இது நமது சருமத்தில் பலவிதமான சேதங்களை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் சருமத்தை எப்பொழுதும் இளமையாக வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்கள் உணவில் சர்க்கரையை அகற்றுவது நல்லது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.