அழகு

வறண்ட தோலுக்கு இனி காஸ்ட்லி லோஷன் எல்லாம் வேண்டாம்… தேங்காய் எண்ணெய் ஒன்னு போதும்!!!

பெரும்பாலான நபர்களுக்கு குளிர்காலத்தில் சருமம் வறண்டு காணப்படும். எனவே சருமத்தை மாய்சரைஸ் செய்வதற்காக பலர் லோஷன்களை அடிக்கடி தடவிக் கொண்டே இருப்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஒருவேளை குளிர் காலத்தில் உங்களுக்கும் இந்த மாதிரி மாதிரியான வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமம் இருந்தால் உங்களுக்கான சிறந்த தீர்வு இந்த பதிவில் உள்ளது. 

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. வரண்ட சருமத்தை சரி செய்து மினுமினுப்பான, பொலிவான சருமத்தை பெறுவதற்கு தேங்காய் எண்ணெயுடன் எந்தெந்த பொருளை பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேங்காய் எண்ணெய் என்பது நம்முடைய சருமத்தை பராமரிக்க உதவும் ஒரு இயற்கை பொருளாக அமைகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் நமது சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்கி சருமத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது. 

குளிர்காலத்தில் நீங்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தும் பொழுது அது உங்கள் சருமத்தை நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்தோடு வைக்கிறது. உங்களுடைய இரவு நேர சரும பராமரிப்பு வழக்கத்தில் தேங்காய் எண்ணெயில் சேர்த்த வந்தால் காலை எழும்பொழுது மென்மையான அதே நேரத்தில் மினுமினுப்பான சருமத்தை பெறலாம். இப்போது தேங்காய் எண்ணெயை சருமத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். 

கிளிசரின் மற்றும் தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெயில் கிளிசரின் கலந்து உங்கள் சருமத்தில் தடவுங்கள். இது வறண்ட சருமம் கொண்ட நபர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் கிளிசரின் ஆகிய இரண்டுமே சருமத்தில் உள்ள வறட்சியைப் போக்கி அதற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. தேங்காய் எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளதால் இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, அதனை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதே நேரத்தில் கிளிசரனை உங்களுடைய தலைமுடி பராமரிப்பிலும் பயன்படுத்தலாம். இந்த கலவையை தலைமுடியில் தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து பின்னர் காலையில் தலைமுடியை வழக்கம் போல அலச வேண்டும். 

இதையும் படிக்கலாமே: இதயத்தை பலமாக்கும் வெல்லம்!!! 

இரவு நேர சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேஷன்

வறண்ட சருமத்தை போக்குவதற்கு உங்களுடைய இரவு நேர சரும பராமரிப்பில் இந்த விஷயத்தை நீங்கள் கட்டாயமாக சேர்க்க வேண்டும். அதாவது உங்கள் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்து அதில் உள்ள இறந்த செல்களை அகற்ற வேண்டும். இதற்கு நீங்கள் காபி பொடி மற்றும் சிறிதளவு கடலை மாவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். இது இறந்த சரும செல்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும். 

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய்

கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெயை கலந்து பயன்படுத்துவது உங்கள் சருமத்தில் பல அதிசயங்களை செய்யும்  இந்த இரண்டு பொருட்களுமே உங்கள் சருமத்தில் சிறந்த முறையில் செயல்படும். கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி அதில் உள்ள வறட்சியை போக்குகிறது. கற்றாழை ஜெல்லில் வைட்டமின் A இருப்பதால் இது சேதமடைந்த சருமத்தை சரி செய்கிறது. மேலும் அதில் உள்ள வைட்டமின் C ஆன்டி-ஆக்சிடன்ட் ஆக செயல்பட்டு சருமத்தை பளபளக்க செய்கிறது.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.