சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னை: தீபாவளி திருநாள் விடுமுறையையொட்டி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம், கடந்த 2 நாட்களாக இறங்குமுகத்திலே காணப்பட்டது. மேலும், ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்கள் இருந்தாலும், தங்கம் விலை கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. மேலும், நிறைவுப் பகுதியை எட்டியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலாலும், தங்கம், பிட்காயின் உள்ளிட்டவற்றின் மதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இன்று (நவ.6) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 365 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 870 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் பதவியில் நீங்க உட்காருங்க.. துணை முதலமைச்சர் நடிகை வைத்த கோரிக்கை!
மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.