சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னை: தீபாவளி திருநாள் விடுமுறையையொட்டி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம், கடந்த 2 நாட்களாக இறங்குமுகத்திலே காணப்பட்டது. மேலும், ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்கள் இருந்தாலும், தங்கம் விலை கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. மேலும், நிறைவுப் பகுதியை எட்டியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலாலும், தங்கம், பிட்காயின் உள்ளிட்டவற்றின் மதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இன்று (நவ.6) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 365 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 870 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் பதவியில் நீங்க உட்காருங்க.. துணை முதலமைச்சர் நடிகை வைத்த கோரிக்கை!
மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.