ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டெல்லி: உலகின் முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ப்ஸ் (Forbes), அவ்வப்போது டாப் நபர்களைப் பட்டியலிட்டு வெளியிடும். இதில் சினிமா பிரபலங்களும் அடிக்கடி காட்சி தருவர். இந்த நிலையில், இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன்படி, முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தில் உள்ளார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலின்படி, 2023ஆம் ஆண்டை விட 27.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இதனால் அவரது நிகர சொத்து மதிப்பு 119.5 பில்லியன் டாலராக உள்ளது. அதேநேரம், அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 108.3 பில்லியன் டாலராக உள்ளது. இதன் காரணமாக முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: ரத்தன் டாடாவுக்கு அடுத்தது யார்? காத்திருக்கும் வாரிசுகள்!
மேலும், அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகவும் ஆடம்பரமான முறையில் 5 ஆயிரம் கோடி செலவில் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையிலும், அவரது சொத்து மதிப்பால் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, கெளதம் அதானி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் 43.7 பில்லியன் டாலர்க சொத்துகளுடன் சாவித்ரி ஜிண்டால் உள்ளார். இவர் O.P. ஜிண்டால் குழுமத்தின் தலைவராவார். தொடர்ந்து, நான்காவது இடத்தில் ஷிவ் நாடார் உள்ளார். HCL நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான இவரது சொத்து மதிப்பு 40.2 பில்லியன் டாலர் ஆகும்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.