கணவரை பிரிந்து வாழும் சின்னத்திரை நடிகை தற்போது வெள்ளித்திரையில் தன்னுடைய திறமையால் காலடி எடுத்து வைத்துள்ளார்.அவர் ஹீரோயினியாக நடித்துள்ள முதல் படத்திலே கவர்ச்சியில் தாராளம் காட்டியதால்,ரசிகர்கள் பலரும் முகம் சுளித்துள்ளனர்.
இதையும் படியுங்க: நான் சொல்ற ஹோட்டல்ல தான் ரூம் போடணும்…அடம் பிடிக்கும் ஸ்டார் நடிகை..!
அதுவும் சமீபத்தில் வெளியான படத்தின் பாடலில்,ஹீரோவுடன் படுக்கையில் இருக்கும் காட்சிகளை பார்த்து,நம்ம சின்னத்திரை அம்மணியா இது என பலரும் ஷாக் ஆனார்கள்.இது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது,படத்தின் கதைக்கு ஏற்ப நடித்துள்ளேன்,இதில் என்ன தவறு என கேட்டுள்ளார்.
சின்னத்திரையில் பிரபலமான அந்த நடிகை டாப் சீரியல் மூலம் கொடி கட்டி பறந்தார்,அப்போது மற்றொரு சின்னத்திரை நடிகரை காதலித்து கரம் பிடித்தார்,திருமணத்திற்கு பிறகு ஸ்மூத் ஆக சென்ற வாழ்க்கையில் கணவருக்கு மார்க்கெட் கம்மி ஆனது,ஆனால் அம்மணிக்கோ மார்க்கெட் மின்னல் வேகத்தில் உயர்ந்தது,இதனால் கணவர் அம்மணியை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர பல கண்டிசன்களை போட்டார்.
இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் அவ்வப்போது சண்டைகள் வெடித்தது,சில நாட்களுக்கு பிறகு அம்மணி,கணவருக்கு டாடா காட்டி விவாகரத்து வாங்கினார்,அதன் பிறகு தன்னுடைய கரியரில் முழு கவனம் செலுத்தி வந்த நடிகைக்கு,பெரிய ஷோ ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது,அதிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள்,அப்போது முன்னாள் கணவர் மனைவியிடம் எப்படியாவது சேர்ந்து விடலாம் என ஸ்கெட்ச் போட்டார்,ஆனால் அது புஷ்வாணம் ஆனது தான் மிச்சம்,இதனால் கடும் அப்செட்டில் இருந்த முன்னாள் கணவர்,தற்போது தனது மனைவி படத்தில் நடித்திருக்கும் காட்சிகளை பார்த்து மிகவும் கோவத்தில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நடிகை தன்னுடைய கணவரை கடுப்பேற்றவே அந்த நடிகருடன் கவர்ச்சி வேண்டும் என இயக்குனரிடம் அடம்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது,இதனால் அம்மணி ரசிகர்கள்,இதெல்லாம் ரொம்ப தப்புமா என நடிகைக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.