கணவரை பிரிந்து வாழும் சின்னத்திரை நடிகை தற்போது வெள்ளித்திரையில் தன்னுடைய திறமையால் காலடி எடுத்து வைத்துள்ளார்.அவர் ஹீரோயினியாக நடித்துள்ள முதல் படத்திலே கவர்ச்சியில் தாராளம் காட்டியதால்,ரசிகர்கள் பலரும் முகம் சுளித்துள்ளனர்.
இதையும் படியுங்க: நான் சொல்ற ஹோட்டல்ல தான் ரூம் போடணும்…அடம் பிடிக்கும் ஸ்டார் நடிகை..!
அதுவும் சமீபத்தில் வெளியான படத்தின் பாடலில்,ஹீரோவுடன் படுக்கையில் இருக்கும் காட்சிகளை பார்த்து,நம்ம சின்னத்திரை அம்மணியா இது என பலரும் ஷாக் ஆனார்கள்.இது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது,படத்தின் கதைக்கு ஏற்ப நடித்துள்ளேன்,இதில் என்ன தவறு என கேட்டுள்ளார்.
சின்னத்திரையில் பிரபலமான அந்த நடிகை டாப் சீரியல் மூலம் கொடி கட்டி பறந்தார்,அப்போது மற்றொரு சின்னத்திரை நடிகரை காதலித்து கரம் பிடித்தார்,திருமணத்திற்கு பிறகு ஸ்மூத் ஆக சென்ற வாழ்க்கையில் கணவருக்கு மார்க்கெட் கம்மி ஆனது,ஆனால் அம்மணிக்கோ மார்க்கெட் மின்னல் வேகத்தில் உயர்ந்தது,இதனால் கணவர் அம்மணியை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர பல கண்டிசன்களை போட்டார்.
இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் அவ்வப்போது சண்டைகள் வெடித்தது,சில நாட்களுக்கு பிறகு அம்மணி,கணவருக்கு டாடா காட்டி விவாகரத்து வாங்கினார்,அதன் பிறகு தன்னுடைய கரியரில் முழு கவனம் செலுத்தி வந்த நடிகைக்கு,பெரிய ஷோ ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது,அதிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள்,அப்போது முன்னாள் கணவர் மனைவியிடம் எப்படியாவது சேர்ந்து விடலாம் என ஸ்கெட்ச் போட்டார்,ஆனால் அது புஷ்வாணம் ஆனது தான் மிச்சம்,இதனால் கடும் அப்செட்டில் இருந்த முன்னாள் கணவர்,தற்போது தனது மனைவி படத்தில் நடித்திருக்கும் காட்சிகளை பார்த்து மிகவும் கோவத்தில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நடிகை தன்னுடைய கணவரை கடுப்பேற்றவே அந்த நடிகருடன் கவர்ச்சி வேண்டும் என இயக்குனரிடம் அடம்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது,இதனால் அம்மணி ரசிகர்கள்,இதெல்லாம் ரொம்ப தப்புமா என நடிகைக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
தென்காசி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணினி ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். தென்காசி: தென்காசி மாவட்டம்,…
காந்திக்கும், பெரியாருக்கும் சினிமா பிடிக்காது என்பதால், இந்த விஷயத்தில் அவர்களை மன்னிக்கவே மாட்டேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை: சென்னையில்…
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
This website uses cookies.