தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா (சைமா) வரும் செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது.இது 12 வது விருது வழங்கும் விழா.
ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த படங்களில் இருந்து சிறந்த படங்களும், கலைஞர்களும் தேர்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும். இந்த வருடம் நடைபெறும் விழாவில் பங்குபெறும் நட்சத்திரங்கள் கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் 11 விருதுகளுக்கும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் 9 விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர் பிரிவில் ரஜினிகாந்த் (ஜெயிலர்), விஜய் (லியோ), விக்ரம் (பொன்னியின்செல்வன் 2), சிவகார்த்திகேயன் (மாவீரன்), உதயநிதி ஸ்டாலின் (மாமன்னன்), சித்தார்த் (சித்தா).
சிறந்த நடிகைக்கான பிரிவில் திரிஷா (லியோ), நயன்தாரா (அன்னபூரணி), ஐஸ்வர்யாராய் (பொன்னியின்செல்வன் 2), கீர்த்திசுரேஷ் (மாமன்னன்), மீதா ரகுநாத் (குட்நைட்), ஐஸ்வர்யா ராஜேஷ் (பர்ஹானா).
சிறந்த இயக்குனர் பிரிவில் நெல்சன் (ஜெயிலர்), லோகேஷ் கனகராஜ் (லியோ), மணிரத்னம் (பொன்னியின்செல்வன் 2), வெற்றிமாறன் (விடுதலை), அருண் குமார் (சித்தா), மாரி செல்வராஜ் (மாமன்னன்)
சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் இளையராஜா (விடுதலை), ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின்செல்வன் 2), அனிருத் (ஜெயிலர், லியோ), சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா), நிவாஸ் கே.பிரசன்னா (டக்கர்)
சிறந்த படம் பிரிவில் ஜெயிலர், மாமன்னன், லியோ, பொன்னியின் செல்வன் 2, விடுதலை.
இன்னும் பல பிரிவுகளில் ஜெயிலர் மற்றும் மாமன்னன் படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.