தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ளார். ஆந்திராவில் தெலுங்கு தேசம்-ஜனசேனா-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு சென்றதால் அவரது கான்வாய் செல்வதற்காக பொது மக்களின் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.
பவன் கல்யாணின் கானாவாய்க்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பெண்டுர்த்தி என்ற இடத்தில் நடக்க இருந்த பொறியியல் படிப்பிற்கான JEE நுழைவுத் தேர்வுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலர் இந்த போக்குவரத்து தடையில் சிக்கிக்கொண்டுவிட்டனர். இதனால் அம்மாணவர்கள் நுழைவுத் தேர்வு நடக்கும் மையத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. இதனால் கிட்டத்தட்ட 30 மாணவர்களுக்கும் மேல் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என புகார் எழுந்துள்ளது.
தேர்வு எழுத முடியாத மாணவர் ஒருவரின் தாயார், கண்ணீர் விட்டு அழுதபடி ஊடகங்களுக்கு பேட்டிக்கொடுத்தார். பவன் கல்யாணின் கான்வாயால் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டோம். இதனால் தேர்வு எழுத முடியவில்லை என்று கூறியுள்ளார். இந்த செய்தி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. ஆந்திர எதிர்கட்சிகள் பவன் கல்யாணுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என காவல் துறைக்கு பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாணின் கான்வாயால் போக்குவரத்து தடை ஏற்பட்டு 30 மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ள செய்தி தமிழகத்திலும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.