சென்னை தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா-. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷை காதலித்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல் பரவியது. நரேஷும் 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர். 3வதாக ரம்யா ரகுபதி என்பவரை மணந்து அவரையும் சமீபத்தில் விவாகரத்து செய்து உள்ளார்.
இந்த நிலையில் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த போது, 3வது மனைவியான ரம்யா ரகுபதி அங்கு சென்று அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார். அப்போது, போலீசார் குறுக்கிட்டு, அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
பவித்ரா லோகேஷ் சினிமாவில் அம்மா வேடங்களுக்கு புகழ்பெற்றவர். இவர் பல படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் 2018ஆம் ஆண்டு ‘சம்மோகனம்’ படப்பிடிப்பின் போது சந்தித்தனர். இருவரும் நெருங்கிய உறவை வளர்த்து கொண்டனர்.
நரேஷ், பவித்ரா லோகேஷ் இருவரும் ‘அண்டாரு பாகுந்தலி அந்துல நேனுந்தலி’, ‘மிடில் கிளாஸ் அப்பா’, ‘ஹேப்பி வெட்டிங்’, ‘ராமராவ் ஆன் டூட்டி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பவித்ராவை இந்த ஆண்டு நரேஷ் பாபு 4ஆம் மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், மூன்றாவது மனைவி ரம்யா அவர்கள் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து வந்துள்ளார். தன் சொந்த வாழ்க்கையை வைத்து மல்லி பெல்லி என்ற பெயரில் படமாக எடுத்துள்ளதாகவும், அப்படத்தில் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மூன்றாம் மனைவி ரம்யா நீதிமன்றத்தில் புகார் அளித்து வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக இருதரப்பினரின் விவாதங்களை கேட்ட நீதிபதி ரம்யாவின் வழக்கை தள்ளுபடி செய்ததோடு தணிக்கை குழு கற்பனை கதை என்று சான்றிதழ் அளித்திருப்பதால் தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
மேலும், மற்றொரு வழக்கில் பல வருடங்களாகப் பிரிந்து வாழும் மூன்றாம் மனைவி நான்காம் மனைவியுடன் குடும்பம் நடத்தும் நரேஷ்ன் வீட்டிற்கு செல்ல பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்:…
ரெட்ரோ பட விவகாரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "கங்குவா" படம் எதிர்பார்த்த அளவில்…
This website uses cookies.